| 883 | பாதத்து அணையும் சிலம்பர் போலும்; பார் ஊர் விடை ஒன்று உடையார் போலும்;
 பூதப்படை ஆள் புனிதர் போலும்; பூம் புகலூர் மேய புராணர்
 போலும்;
 வேதப் பொருள் ஆய் விளைவார் போலும்; வேடம் பரவித்
 திரியும் தொண்டர்
 ஏதப்படா வண்ணம் நின்றார் போலும் இன்னம்பர்த் தான்
 தோன்றி ஈசனாரே.
 |