| 939 | சங்க நிதி பதும நிதி இரண்டும் தத்து தரணியொடு வான் ஆளத் தருவரேனும்,
 மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்,
 மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்
 அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயரா(அ)ய்
 ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும்,
 கங்கை வார் சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில்,
 அவர் கண்டீர், நாம் வணங்கும் கடவுளாரே!.
 |