| 936 | நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய்; நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்;
 மன் ஆனாய்; மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்; மறை
 நான்கும் ஆனாய்; ஆறு அங்கம் ஆனாய்;
 பொன் ஆனாய்; மணி ஆனாய்; போகம் ஆனாய்;
 பூமிமேல் புகழ் தக்க பொருளே! உன்னை,
 “என் ஆனாய்! என் ஆனாய்!” என்னின் அல்லால்,
 ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே?.
 |