| 937 | அத்தா! உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்; அருள் நோக்கில்-தீர்த்த நீர் ஆட்டிக் கொண்டாய்;
 எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்; எனை
 ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்;
 பித்தனேன், பேதையேன், பேயேன், நாயேன், பிழைத்
 தனகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே!
 இத்தனையும் எம் பரமோ? ஐய! ஐயோ! எம்பெருமான்
 திருக்கருணை இருந்த ஆறே!.
 |