Try error :java.sql.SQLException: Closed Resultset: next
260நீர் ஊரும் செஞ்சடையாய்! நெற்றிக்கண்ணாய்!
       நிலாத்திங்கள்-துண்டத்தாய்! நின்னைத் தேடி,
ஓர் ஊரும் ஒழியாமே ஒற்றித்து எங்கும் உலகம்
            எலாம் திரிதந்து, நின்னைக் காண்பான்,
தேர் ஊரும் நெடுவீதி பற்றி நின்று, திருமாலும்
                நான்முகனும், தேர்ந்தும் காணாது,
“ஆரூரா! ஆரூரா!” என்கின்றார்கள்-அமரர்கள்
                    தம் பெருமானே! ஆரூராயே!.