| 59 | திருமகட்குச் செந்தாமரை ஆம் அடி; சிறந்தவர்க்குத் தேன் ஆய் விளைக்கும்(ம்) அடி; பொருளவர்க்குப் பொன் உரை ஆய் நின்ற(வ்) அடி; புகழ்வார் புகழ் தகைய வல்ல(வ்) அடி; உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி; உரு என்று உணரப்படாத(வ்)அடி; திரு அதிகைத் தென் கெடில நாடன்(ன்) அடி-திரு வீரட்டானத்து எம் செல்வன்(ன்) அடி. |