6.99 திருப்புகலூர்
திருத்தாண்டகம்
972எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ,
    எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்?
கண் இலேன்! மற்று ஓர் களை கண் இல்லேன்,
    கழல் அடியே கை தொழுது காணின் அல்லால்;
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்; ஒக்க
            அடைக்கும் போது உணர மாட்டேன்;
புண்ணியா! உன் அடிக்கே போதுகின்றேன் பூம்
                   புகலூர் மேவிய புண்ணியனே!.