405 | சிரம் ஏற்ற நான்முகன் தன் தலையும் மற்றைத் திருமால் தன் செழுந் தலையும் பொன்றச் சிந்தி, உரம் ஏற்ற இரவி பல்-தகர்த்து, சோமன் ஒளிர்கலைகள் பட உழக்கி, உயிரை நல்கி, நரை ஏற்ற விடை ஏறி, நாகம் பூண்ட நம்பியையே, “மறை நான்கும் ஓலம் இட்டு வரம் ஏற்கும் மழபாடி வயிரத்தூணே!” என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே. |