திருநாவுக்கரசர் அருளிய தேவாரத் திருப்பதிகங்கள்
ஆறாம் திருமுறை
6.1 கோயில் - பெரிய திருத் தாண்டகம்
1அரியானை, அந்தணர் தம் சிந்தை யானை,
    அருமறையின் அகத்தானை, அணுவை, யார்க்கும்
தெரியாத தத்துவனை, தேனை, பாலை, திகழ் ஒளியை,
                  தேவர்கள்தம் கோனை, மற்றைக்
கரியானை, நான்முகனை, கனலை, காற்றை,
          கனைகடலை, குலவரையை, கலந்து நின்ற
பெரியானை, பெரும்பற்றப்புலியூரானை,-பேசாத நாள்
                         எல்லாம் பிறவா நாளே.