திருநாவுக்கரசர் அருளிய தேவாரத் திருப்பதிகங்கள் ஆறாம் திருமுறை 6.1 கோயில் - பெரிய திருத் தாண்டகம் |
1 | அரியானை, அந்தணர் தம் சிந்தை யானை, அருமறையின் அகத்தானை, அணுவை, யார்க்கும் தெரியாத தத்துவனை, தேனை, பாலை, திகழ் ஒளியை, தேவர்கள்தம் கோனை, மற்றைக் கரியானை, நான்முகனை, கனலை, காற்றை, கனைகடலை, குலவரையை, கலந்து நின்ற பெரியானை, பெரும்பற்றப்புலியூரானை,-பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே. |
|
உரை
|