99பூதப்படை உடையார்;பொங்கு நூலார்;
     புலித்தோல் உடையினார்;போர் ஏற்றி(ன்)னார்;
வேதத்தொழிலார் விரும்ப நின்றார்;
        விரிசடைமேல் வெண்திங்கள் கண்ணி சூடி,
ஓதத்து ஒலி கடல்வாய் நஞ்சம் உண்டார்;
           உம்பரோடு அம்பொன்னுலகம் ஆண்டு
பாதத்தொடு கழலார்;பைங்கண் ஏற்றார்;
               பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.