99 | பூதப்படை உடையார்;பொங்கு நூலார்; புலித்தோல் உடையினார்;போர் ஏற்றி(ன்)னார்; வேதத்தொழிலார் விரும்ப நின்றார்; விரிசடைமேல் வெண்திங்கள் கண்ணி சூடி, ஓதத்து ஒலி கடல்வாய் நஞ்சம் உண்டார்; உம்பரோடு அம்பொன்னுலகம் ஆண்டு பாதத்தொடு கழலார்;பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே. |