149வித்து ஆம்; முளை ஆகும்; வேரே தான் ஆம்;
          வேண்டும் உருவம் ஆம்; விரும்பி நின்ற
பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும்(ம்) ஆம்;
       பால் நிறமும் ஆம்; பரஞ்சோதி தான் ஆம்;
தொத்து ஆம் அமரர்கணம் சூழ்ந்து போற்றத்
      தோன்றாது, என் உள்ளத்தின் உள்ளே நின்ற
கத்து ஆம்; அடியேற்குக் காணா காட்டும் கண்
                  ஆம்-கருகாவூர் எந்தைதானே.