165பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சு ஆய்,
   பிரிவு உடைய குணம் பேசில் பத்தோடு ஒன்று ஆய்,
விரியாத குணம் ஒரு கால் நான்கே என்பர்;
     விரிவு இலாக் குணம் நாட்டத்து ஆறே என்பர்;
தெரிவு ஆய குணம் அஞ்சும் சமிதை அஞ்சும்
         பதம் அஞ்சும் கதி அஞ்சும் செப்பினாரும்,
எரி ஆய தாமரைமேல் இயங்கினாரும்-இடைமருது
                             மேவிய ஈசனாரே.