173 | கரப்பர், கரிய மனக் கள்வர்க்கு; உள்ளம் கரவாதே தம் நினையகிற்பார் பாவம் துரப்பர்; தொடு கடலின் நஞ்சம் உண்பர்; தூய மறை மொழியார்; தீயால் ஒட்டி நிரப்பர்; புரம் மூன்றும் நீறு செய்வர்; நீள் சடையர்; பாய்விடை கொண்டு எங்கும் ஐயம் இரப்பர்; எமை ஆள்வர்; என் உள் நீங்கார்-இடைமருது மேவி இடம் கொண்டாரே. |