208சொல்லானை, சுடர்ப் பவளச் சோதியானை, தொல்
              அவுணர் புரம் மூன்றும் எரியச் செற்ற
வில்லானை, எல்லார்க்கும் மேல் ஆனானை,
           மெல்லியலாள் பாகனை, வேதம் நான்கும்
கல்லாலின் நீழல் கீழ் அறம் கண்டானை,
                    காளத்தியானை, கயிலை மேய
நல்லானை, நம்பியை, நள்ளாற்றானை,-நான்
        அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.