Try error :java.sql.SQLException: Closed Resultset: next
250மலை வளர்த்த மடமங்கை பாகத்தான்காண்;
          மயானத்தான்காண்; மதியம் சூடினான்காண்;
இலை வளர்த்த மலர்க்கொன்றை மாலையான்காண்;
  இறையவன்காண்; எறிதிரை நீர்நஞ்சு உண்டான்காண்;
கொலை வளர்த்த மூ இலைய சூலத்தான்காண்;
   கொடுங்குன்றன்காண்; கொல்லை ஏற்றினான் காண்;
சிலை வளர்த்த சரம் துரந்த திறத்தினான்காண்-திரு
                 ஆரூரான்காண், என் சிந்தையானே.