280பரியது ஓர் பாம்பு அரைமேல் ஆர்த்தார்போலும்;
           பாசுபதம் பார்த்தற்கு அளித்தார்போலும்;
கரியது ஓர் களிற்று உரிவை போர்த்தார்போலும்;
           காபாலம் கட்டங்கக் கொடியார்போலும்;
பெரியது ஓர் மலை வில்லா எய்தார்போலும்;
             பேர் நந்தி என்னும் பெயரார்போலும்;
அரியது ஓர் அரணங்கள் அட்டார்போலும்-
             அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.