374 | “இண்டைச் சடைமுடியாய்!” என்றேன், நானே; “இருசுடர் வானத்தாய்!” என்றேன், நானே; “தொண்டர் தொழப்படுவாய்!” என்றேன், நானே; “துருத்தி நெய்த்தானத்தாய்!” என்றேன், நானே; “கண்டம் கறுத்தானே!” என்றேன், நானே; “கனல் ஆகும் கண்ணானே!” என்றேன், நானே; “அண்டத்துக்கு அப்பால் ஆம் ஐயாற(ன்)னே!” என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!. |