402அறை கலந்த குழல், மொந்தை, வீணை, யாழும்,
             அந்தரத்தின் கந்தருவர் அமரர் ஏத்த,
மறை கலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார்
                 வான் ஆளக் கொடுத்தி அன்றே!
“கறை கலந்த பொழில் கச்சிக் கம்பம் மேய கன
            வயிரத் திரள் தூணே! கலி சூழ் மாடம்
மறை கலந்த மழபாடி வயிரத்தூணே!” என்று என்றே
                     நான் அரற்றி நைகின்றேனே.