410அல் ஆய்ப் பகல் ஆனாய் நீயே என்றும், ஆதிக்
                        கயிலாயன் நீயே என்றும்,
கல்லால் அமர்ந்தாயும் நீயே என்றும், காளத்திக்
                        கற்பகமும் நீயே என்றும்,
சொல் ஆய்ப் பொருள் ஆனாய் நீயே என்றும்,
           சோற்றுத்துறை உறைவாய் நீயே என்றும்,
செல் வாய்த் திரு ஆனாய் நீயே என்றும், நின்ற
               நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.