Try error :java.sql.SQLException: Closed Resultset: next
6.45 திருஒற்றியூர்
திருத்தாண்டகம்
448வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மதமத்தம்
                      சேர் சடை மேல் மதியம் சூடி,
திண் தோள்கள் ஆயிரமும் வீசி நின்று, திசை சேர
                      நடம் ஆடி, சிவலோக(ன்)னார்
உண்டார் நஞ்சு, உலகுக்கு ஓர் உறுதி வேண்டி;
                 ஒற்றியூர் மேய ஒளி வண்ண(ன்)னார்;
கண்டேன், நான் கனவு அகத்தில்; கண்டேற்கு என்
  தன் கடும் பிணியும் சுடும் தொழிலும் கைவிட்ட(வ்)வே.