623நினைத்தவர்கள் நெஞ்சுளாய்! வஞ்சக் கள்வா! நிறை
      மதியம் சடை வைத்தாய்! அடையாது உன்பால்
முனைத்தவர்கள் புரம் மூன்றும் எரியச் செற்றாய்! முன்
       ஆனைத் தோல் போர்த்த முதல்வா! என்றும்
கனைத்து வரும் எருது ஏறும் காளகண்டா!
          கயிலாயமலையா! நின் கழலே சேர்ந்தேன்;
அனைத்து உலகும் ஆள்வானே! ஆனைக்காவா!
   அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.