656 | ஆய்ந்தவன் காண், அருமறையோடு அங்கம் ஆறும்; அணிந்தவன் காண், ஆடு அரவோடு என்பும் ஆமை; காய்ந்தவன் காண், கண் அழலால் காமன் ஆகம்; கனன்று எழுந்த காலன் உடல் பொடி ஆய் வீழப் பாய்ந்தவன் காண்; பண்டு பலசருகால் பந்தர் பயின்ற நூல் சிலந்திக்குப் பார் ஆள் செல்வம் ஈந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே. |