Try error :java.sql.SQLException: Closed Resultset: next
682கார் ஒளிய கண்டத்து எம் கடவுள் தன்னை,
                  காபாலி, கட்டங்கம் ஏந்தினானை,
பார் ஒளியை, விண் ஒளியை, பாதாள(ன்)னை, பால்
                மதியம் சூடி ஓர் பண்பன் தன்னை,
பேரொளியை, பெண் பாகம் வைத்தான் தன்னை,
        பேணுவார் தம் வினையைப் பேணி வாங்கும்
சீர் ஒளியை, திரு முதுகுன்று உடையான் தன்னை,
          தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.