886கரு உற்ற காலத்தே என்னை ஆண்டு கழல் போது தந்து,
                           அளித்த கள்வர் போலும்;
செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும்; தேவர்க்கும்
                     தேவர் ஆம் செல்வர் போலும்;
மருவில் பிரியாத மைந்தர் போலும்; மலர் அடிகள் நாடி
                                 வணங்கல் உற்ற
இருவர்க்கு ஒருவராய் நின்றார் போலும் இன்னம்பர்த்
                          தான் தோன்றி ஈசனாரே.