886 | கரு உற்ற காலத்தே என்னை ஆண்டு கழல் போது தந்து, அளித்த கள்வர் போலும்; செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும்; தேவர்க்கும் தேவர் ஆம் செல்வர் போலும்; மருவில் பிரியாத மைந்தர் போலும்; மலர் அடிகள் நாடி வணங்கல் உற்ற இருவர்க்கு ஒருவராய் நின்றார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. |