964 | வார் ஆண்ட கொங்கையர் சேர் மனையில் சேரோம்; “மாதேவா! மாதேவா!” என்று வாழ்த்தி, நீர் ஆண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்; நீறு அணியும் கோலமே நிகழப் பெற்றோம்; கார் ஆண்ட மழை போலக் கண்ணீர் சோரக் கல் மனமே நல் மனமாக் கரையப் பெற்றோம்; பார் ஆண்டு பகடு ஏறித் திரிவார் சொல்லும் பணி கேட்கக் கடவோமோ? பற்று அற்றோமே. |