Try error :java.sql.SQLException: Closed Resultset: next
684ஊன் கருவின் உள்-நின்ற சோதியானை,
         உத்தமனை, பத்தர் மனம் குடி கொண்டானை,
கான் திரிந்து காண்டீபம் ஏந்தினானை, கார்
                  மேகமிடற்றானை, கனலை, காற்றை,
தான் தெரிந்து அங்கு அடியேனை ஆளாக்கொண்டு
        தன்னுடைய திருவடி என் தலை மேல் வைத்த
தீம் கரும்பை, திரு முதுகுன்று உடையான்
    தன்னை, தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே!.