762புக்கு அடைந்த வேதியற்கு ஆய்க் காலற் காய்ந்த
   புண்ணியன் காண்; வெண் நகை வெள்வளையாள் அஞ்ச,
மிக்கு எதிர்ந்த கரி வெருவ, உரித்த கோன் காண்;
    வெண்மதியைக் கலை சேர்த்த திண்மையோன் காண்;
அக்கு அரும்பு பெரும் புன்னை நெருங்கு சோலை
         ஆரூருக்கு அதிபதி காண் அம் தண் தென்றல்
திக்கு அணைந்து வரு மருங்கில்-திருப் புத்தூரில்-
       திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.