763பற்றவன் காண், ஏனோர்க்கும் வானோருக்கும்;
           பராபரன் காண்; தக்கன் தன் வேள்வி செற்ற
கொற்றவன் காண்; கொடுஞ்சினத்தை அடங்கச்
   செற்று, ஞானத்தை மேல் மிகுத்தல் கோளாக் கொண்ட
பெற்றியன் காண்; பிறங்கு அருவிக் கழுக்குன்றத்து
    எம் பிஞ்ஞகன் காண்; பேர் எழில் ஆர் காமவேளைச்
செற்றவன் காண் சீர் மருவு திருப் புத்தூரில்-திருத்
             தளியான் காண்; அவன் என் சிந்தையானே.