Try error :java.sql.SQLException: Closed Resultset: next
816ஊன் உற்ற வெண்தலை சேர் கையர்போலும்;
                ஊழி பல கண்டு இருந்தார் போலும்;
மான் உற்ற கரதலம் ஒன்று உடையார் போலும்;
           மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலும்;
கான் உற்ற ஆடல் அமர்ந்தார் போலும்;
        காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும்
தேன் உற்ற சோலை திகழ்ந்து தோன்றும் திருச்
         சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.