516அஞ்சைக்களத்து உள்ளார்; ஐயாற்று உள்ளார்; ஆரூரார்;
                        பேரூரார்; அழுந்தூர் உள்ளார்;
தஞ்சைத் தளிக்குளத்தார்; தக்களூரார்; சாந்தை அயவந்தி
                                    தங்கினார் தாம்;
நஞ்சைத் தமக்கு அமுதா உண்ட நம்பர்; நாகேச்சுரத்து
                               உள்ளார்; நாரையூரார்;
வெஞ்சொல் சமண் சிறையில் என்னை மீட்டார்
                         வீழிமிழலையே மேவினாரே.