136 | கோ ஆய இந்திரன் உள்ளிட்டார் ஆகக் குமரனும், விக்கின விநாயக(ன்)னும், பூ ஆய பீடத்து மேல் அய(ன்)னும், பூமி அளந்தானும், போற்று இசைப்ப; பா ஆய இன் இசைகள் பாடி ஆடிப் பாரிடமும் தாமும் பரந்து பற்றி, பூ ஆர்ந்த கொன்றை பொறிவண்டு ஆர்க்க, “புறம்பயம் நம் ஊர்” என்று போயினாரே!. |