136கோ ஆய இந்திரன் உள்ளிட்டார் ஆகக்
              குமரனும், விக்கின விநாயக(ன்)னும்,
பூ ஆய பீடத்து மேல் அய(ன்)னும், பூமி
                 அளந்தானும், போற்று இசைப்ப;
பா ஆய இன் இசைகள் பாடி ஆடிப் பாரிடமும்
                           தாமும் பரந்து பற்றி,
பூ ஆர்ந்த கொன்றை பொறிவண்டு ஆர்க்க,
         “புறம்பயம் நம் ஊர்” என்று போயினாரே!.