237ஆடல் மால்யானை உரித்தான் கண்டாய்;
          அகத்தியான் பள்ளி அமர்ந்தான் கண்டாய்;
கோடியான் கண்டாய்; குழகன் கண்டாய்; குளிர்
           ஆரூர் கோயிலாக் கொண்டான் கண்டாய்;
நாடிய நன்பொருள்கள் ஆனான் கண்டாய்;
       நன்மையோடு இம்மை மற்று அம்மை எல்லாம்
வாடிய வாட்டம் தவிர்ப்பான்
   கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.