259 | ஆடுவாய், நீ நட்டம்; அளவின் குன்றா அவி அடுவார், அருமறையோர்; அறிந்தேன், உன்னை; பாடுவார், தும்புருவும் நாரதாதி; பரவுவார், அமரர்களும் அமரர்கோனும்; தேடுவார், திருமாலும் நான்முக(ன்)னும்; தீண்டுவார், மலைமகளும் கங்கையாளும்; கூடுமே, நாய் அடியேன் செய் குற்றேவல்? குறை உண்டே, திரு ஆரூர் குடிகொண்டீர்க்கே?. |