Try error :java.sql.SQLException: Closed Resultset: next
285முடி ஆர் மதி, அரவம், வைத்தார்போலும்;
               மூ உலகும் தாமே ஆய் நின்றார்போலும்;
செடி ஆர் தலைப் பலி கொண்டுஉழல்வார்போலும்;
                 செல் கதிதான் கண்ட சிவனார்போலும்;
கடி ஆர் நஞ்சு உண்டு இருண்ட கண்டர்போலும்;
                       கங்காளவேடக் கருத்தர்போலும்;
அடியார் அடிமை உகப்பார்போலும்-அணி
                        ஆரூர்த் திரு மூலட்டானனாரே.