394 | அலை ஆர்ந்த புனல் கங்கைச் சடையான் கண்டாய்; அண்டத்துக்கு அப்பால் ஆய் நின்றான் கண்டாய்; கொலை ஆன கூற்றம் குமைத்தான் கண்டாய்; கொல் வேங்கைத் தோல் ஒன்று உடுத்தான் கண்டாய்; சிலையால்-திரிபுரங்கள் செற்றான் கண்டாய்; செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய்; மலை ஆர் மடந்தை மணாளன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே. |