Try error :java.sql.SQLException: Closed Resultset: next
394அலை ஆர்ந்த புனல் கங்கைச் சடையான் கண்டாய்;
   அண்டத்துக்கு அப்பால் ஆய் நின்றான் கண்டாய்;
கொலை ஆன கூற்றம் குமைத்தான் கண்டாய்; கொல்
      வேங்கைத் தோல் ஒன்று உடுத்தான் கண்டாய்;
சிலையால்-திரிபுரங்கள் செற்றான் கண்டாய்; செழு
             மா மதி சென்னி வைத்தான் கண்டாய்;
மலை ஆர் மடந்தை மணாளன் கண்டாய் மழபாடி
                      மன்னும் மணாளன் தானே.