Try error :java.sql.SQLException: Closed Resultset: next
857விரிந்தானை; குவிந்தானை; வேதவித்தை; வியன் பிறப்போடு
                        இறப்பு ஆகி நின்றான் தன்னை;
அரிந்தானை, சலந்தரன் தன் உடலம் வேறா; ஆழ்கடல்
             நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்யப்
பரிந்தானை; பல் அசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான்,
                      சிலை மலை நாண் ஏற்றி, அம்பு
தெரிந்தானை; தென் பரம்பைக்குடியில் மேய திரு
                   ஆலம்பொழிலானை; சிந்தி, நெஞ்சே!.