114 | கூர் அரவத்து அணையானும் குளிர்தண்பொய்கை மலரவனும் கூடிச் சென்று அறியமாட்டார்; ஆர் ஒருவர் அவர் தன்மை அறிவார்? தேவர், “அறிவோம்” என்பார்க்கு எல்லாம் அறியல் ஆகாச் சீர் அரவக் கழலானை, நிழல் ஆர் சோலைத் திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை, நீர் அரவத் தண்கழனி நீடூரானை,-நீதனேன் என்னே நான் நினையா ஆறே!. |