168 | கொன்றை அம் கூவிள மாலை தன்னைக் குளிர்சடைமேல் வைத்து உகந்த கொள்கையாரும், நின்ற அனங்கனை நீறா நோக்கி நெருப்பு உருவம் ஆய் நின்ற நிமலனாரும், அன்று அ(வ்)வ் அரக்கன் அலறி வீழ அரு வரையைக் காலால் அழுத்தினாரும், என்றும் இடு பிச்சை ஏற்று உண்பாரும்-இடைமருது மேவிய ஈசனாரே. |