250 | மலை வளர்த்த மடமங்கை பாகத்தான்காண்; மயானத்தான்காண்; மதியம் சூடினான்காண்; இலை வளர்த்த மலர்க்கொன்றை மாலையான்காண்; இறையவன்காண்; எறிதிரை நீர்நஞ்சு உண்டான்காண்; கொலை வளர்த்த மூ இலைய சூலத்தான்காண்; கொடுங்குன்றன்காண்; கொல்லை ஏற்றினான் காண்; சிலை வளர்த்த சரம் துரந்த திறத்தினான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே. |