454 | வல்லராய் வானவர்கள் எல்லாம் கூடி வணங்குவார், வாழ்த்துவார், வந்து நிற்பார், “எல்லை எம்பெருமானைக் காணோம்” என்ன, எவ் ஆற்றால் எவ்வகையால் காணமாட்டார்; நல்லார்கள் நால் மறையோர் கூடி நேடி, “நாம் இருக்கும் ஊர் பணியீர், அடிகேள்!” என்ன, “ஒல்லை தான் திரை ஏறி ஓதம் மீளும் ஒளி திகழும் ஒற்றியூர்” என்கின்றாரே. |