931 | வெம்ப வருகிற்பது அன்று, கூற்றம் நம்மேல்; வெய்ய வினைப் பகையும் பைய நையும்; எம் பரிவு தீர்ந்தோம்; இடுக்கண் இல்லோம்; எங்கு எழில் என் ஞாயிறு? எளியோம் அல்லோம் அம் பவளச் செஞ்சடை மேல் ஆறு சூடி, அனல் ஆடி, ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த செம்பவள வண்ணர், செங்குன்ற வண்ணர், செவ்வான வண்ணர், என் சிந்தையாரே. |