931வெம்ப வருகிற்பது அன்று, கூற்றம் நம்மேல்; வெய்ய வினைப்
                                 பகையும் பைய நையும்;
எம் பரிவு தீர்ந்தோம்; இடுக்கண் இல்லோம்; எங்கு எழில் என்
                           ஞாயிறு? எளியோம் அல்லோம்
அம் பவளச் செஞ்சடை மேல் ஆறு சூடி, அனல் ஆடி, ஆன்
                                 அஞ்சும் ஆட்டு உகந்த
செம்பவள வண்ணர், செங்குன்ற வண்ணர், செவ்வான வண்ணர்,
                                       என் சிந்தையாரே.