6.29 திருஆரூர்
திருத்தாண்டகம்
290திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
     தீம்கரும்பின், இன்சுவையை, தெளிந்த தேறல்,
குருமணியை, குழல் மொந்தை தாளம் வீணை
          கொக்கரையின் சச்சரியின் பாணியானை,
பரு மணியை, பவளத்தை, பசும்பொன், முத்தை,
    பருப்பதத்தில் அருங்கலத்தை, பாவம் தீர்க்கும்
அருமணியை, ஆரூரில் அம்மான்தன்னை,-
         அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.