6.17 திருஇடைமருது
திருத்தாண்டகம்
169ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத் தீயர்; அழகர்;
         படை உடையர்; அம் பொன்தோள் மேல்
நீறு தடவந்து, இடபம் ஏறி, நித்தம்
                 பலி கொள்வர்; மொய்த்த பூதம்
கூறும் குணம் உடையர்; கோவணத்தர்; கோள்
           தால வேடத்தர்; கொள்கை சொல்லின்,
ஈறும் நடுவும் முதலும் ஆவார்-இடைமருது
                     மேவி இடம் கொண்டாரே.