295 | பழகிய வல்வினைகள் பாற்றுவானை, பசுபதியை, பாவகனை, பாவம் தீர்க்கும் குழகனை, கோள் அரவு ஒன்று ஆட்டுவானை, கொடுகொட்டி கொண்டது ஓர் கையான்தன்னை, விழவனை, வீரட்டம் மேவினானை, விண்ணவர்கள் ஏத்தி விரும்புவானை, அழகனை, ஆரூரில் அம்மான்தன்னை,-அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!. |