307பொன் நலத்த நறுங்கொன்றைச் சடையினான்காண்;
            புகலூரும் பூவணமும் பொருந்தினான்காண்;
மின் நலத்த நுண் இடையாள் பாகத்தான்காண்;
        வேதியன்காண்; வெண்புரிநூல் மார்பினான்காண்;
கொல்-நலத்த மூ இலை வேல் ஏந்தினான்காண்;
              கோலமா நீறு அணிந்த மேனியான்காண்-
செந் நலத்த வயல் புடை சூழ் திரு ஆரூரில்-திரு
                 மூலட்டானத்து எம் செல்வன் தானே.