879 | கோழிக் கொடியோன் தன் தாதைபோலும்; கொம்பனாள் பாகம் குளிர்ந்தார் போலும்; ஊழி முதல்வரும் தாமே போலும்; உள்குவார் உள்ளத்தின் உள்ளார் போலும்; ஆழித்தேர் வித்தகரும் தாமே போலும்; அடைந்தவர்கட்கு அன்பராய் நின்றார் போலும்; ஏழு பிறவிக்கும் தாமேபோலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. |