526 | கல்பொலி தோள் சலந்தரனைப் பிளந்த ஆழி கருமாலுக்கு அருள்செய்த கருணையான் காண்; வில் பொலி தோள் விசயன் வலி தேய்வித்தான் காண்; வேடுவனாய்ப் போர் பொருது காட்டினான் காண்; தற்பரம் ஆய் நற்பரம் ஆய் நிற்கின்றான் காண்; சதாசிவன் காண்; தன் ஒப்பார் இல்லாதான் காண்; வெற்பு அரையன் பாவை விருப்பு உளான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே. |