248தலை உருவச் சிரமாலை சூடினான்காண்; தமர்
     உலகம் தலை கலனாப் பலி கொள்வான் காண்;
அலை உருவச் சுடர் ஆழி ஆக்கினான்காண்; அவ்
             ஆழி நெடுமாலுக்கு அருளினான்காண்;
கொலை உருவக் கூற்று உதைத்த கொள்கையான்காண்;
    கூர் எரி நீர் மண்ணொடு காற்று ஆயினான்காண்;
சிலை உருவச் சரம் துரந்த திறத்தினான்காண்-திரு
               ஆரூரான்காண், என் சிந்தையானே.