46முல்லை அம் கண்ணி முடியாய், போற்றி! முழுநீறு
                          பூசிய மூர்த்தி, போற்றி!
எல்லை நிறைந்த குணத்தாய், போற்றி! ஏழ் நரம்பின்
                      ஓசை படைத்தாய், போற்றி!
சில்லை சிரைத்தலையில் ஊணா, போற்றி! சென்று
       அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய், போற்றி!
தில்லைச் சிற்றம்பலம் மேயாய், போற்றி!-திரு
             வீரட்டானத்து எம் செல்வா, போற்றி!.