553மருவார் புரம் மூன்றும் எய்தாய், போற்றி! மருவி
                 என் சிந்தை புகுந்தாய், போற்றி!
உரு ஆகி என்னைப் படைத்தாய், போற்றி! உள்
               ஆவி வாங்கி ஒளித்தாய், போற்றி!
திரு ஆகி நின்ற திறமே, போற்றி! தேசம்
                       பரவப்படுவாய், போற்றி!
கரு ஆகி ஓடும் முகிலே, போற்றி! கயிலை
                  மலையானே, போற்றி போற்றி!.